என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State President"

    • முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

    முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சி ஓடிய காலம் மாறி, ரவுடிகள் ராஜ்யமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. துணைபோய்க் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது சமூகவிரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

    அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூர், வேணுகோபால சுவாமி தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு இரவு சுமார் 7.00 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கொலைவெறித் தாக்குதலின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியை, ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னையின் பிரதான இடத்தில் வெட்டி சாய்க்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பது துளிகூட இல்லை என்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும் கொலைகள் நடைபெறும்போது, தனிப்படை அமைப்பதும், ஒரு சிலரை பிடித்து கைது செய்வதும், வாடிக்கையாக இருக்கிறதே தவிர, சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு போல பல வழக்குகள் பல ஆண்டுகளாக சீரியல் போல ஒடிக் கொண்டிருக்கின்றனவே தவிர, கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததாகத் தெரியவில்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்தே தி.மு.க எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.

    • இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது.

    இதன்பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வன்மையாக கண்டிக்கதக்கது. அவர் பல்வேறு இளைஞர்களுக்கு கல்விக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார். அவர் உதவியால் படித்து பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவரை ரோல் மாடலாக வைத்து இன்னும் பல இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு அவரை சார்ந்து உள்ளவர்களுக்கு மாபெரும் இழப்பு. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்காததை அடுத்து நீதிமன்றத்தை அணுகி இருப்பது நல்ல முடிவு என்று கருதுகிறேன். சரியாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 5-ந் தேதி நெல்லை வருவதாக மாவட்ட தலைவர் தயாசங்கர் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் ஆட்சி 8-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.வருகிற 5-ந் தேதி ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிகுளத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

    ஜூன் 15-ம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.

    மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும், அரசின் திட்டங்களால் ஏற்படும் பயன்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

    மேலும் மத்திய அரசு சாதனை தொடர்பாக பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

    கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 70 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. படிப்படியாக ஒவ்வொரு மாநிலமும் விலையை குறைத்து வரும் நிலையில் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.
     
    அப்போது மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    ×