என் மலர்
நீங்கள் தேடியது "ஆனைமடுவில்"
சேலம், ஆனைமடுவில் மழை அதிக பட்சமாக 42 மி.மீ. பதிவாகியுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர். நேற்றிரவும் கடும் உஷ்ணம் நிலவியதால் பொது மக்கள் தூங்க முடியாமல் புரண்டு, புரண்டு படுத்தனர்.
திடீர் மழை
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது . சேலம் மாநகரில் 6 மணிக்கு தொடங்கிய மழை 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது . இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாந–கர் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
இதே போல வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு பகுதியில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.