என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polytechnic"

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.
    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற வாரசந்தை மற்றும் மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.

    டெங்கு காய்ச்சலை தடுக்கவும், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்தும் டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்றும் மற்றும் சந்தையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழச்சியில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு மூலிகை புகை போடுவது, கொசு உற்பத்தியை தடுப்பது என்பதை பற்றிய குறிப்புகளை கூறியதோடு டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகளில் உள்ள தேங்கிய தண்ணீரை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலழகன், என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
    தென்காசி:

    தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் செயல்பட்டு வரும் பெஸ்டன் என்ஜினீயர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வளாகத்தேர்வு நடைபெற்றது.

    நிறுவனத்தின் சார்பில் வேலவன் மற்றும் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை நடத்தினர். முன்னதாக, பெஸ்டன் நிறுவனத்தில் பணியில் சேரும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தில் பெஸ்டன் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி நிறுவனத்தின் வேலவன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

    வளாகத்தேர்வில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 4 பேர், இதர 10 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 82 மாணவ-மாணவிகளும் மற்றும் 2 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 4 பேரும் கலந்து கொண்டனர். 

    தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் புதிய பாஸ்கர், நிர்வாக இயக்குனர் கல்யாணி, கல்லூரி முதல்வர் சேவியர் இருதயராஜ், நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஆறுமுகம் மற்றும் சிவா ஆகியோர் செய்திருந்தனர். எலெக்ட்ரிக்கல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர் மொஹம்மதுகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதே துறையை சேர்ந்த மாணவர் செய்யதுமசூது வரவேற்றார். 
    ×