என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கூர்"

    • 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.
    • உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    T.1349 மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 30.9.1957ல் பதிவு செய்யப்பட்டு 4050 உறுப்பினர்களுடன் ரூ.40.91 லட்சம் பங்கு மூலதனத்துடன் சிறப்பாக செயல்படும் சங்கம் ஆனது 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.

    இதனை அடுத்து நடைபெற்ற 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசின் தலைமை கொரடா மூலம் பரிசு பெறப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தின் அனைத்து கணக்கீடுகளும் கணினி மூலம் செயல்படுவது டன் வழங்கப்படும் ரசீதுகள் அனைத்தும் கணிணி வழியில் வழங்கப்பட்டு வருகிறது.

    உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது..வாடிக்கையாளரகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்கின்ற சங்கம் அரசின் சிறப்பு திட்டங்களான கூட்டுறவு ஆங்கில மருந்தகம், பொது சேவை மையம் அக்ரோ சர்வீஸ் சென்டர் மற்றும் பல சேவை மையத்தின் மூலம் கதிர் அறுவடை இயந்திரம், டிராக்டர், டிப்பர் மற்றும் கல்டிவேட்டர் மூலம் குறைந்த செலவில் சேவை செய்ய வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இந்த சங்கம் மதுக்கூர் சங்க தலைவர் தண்டாயுதபாணி தலைமையிலும், செயலாளர் வீரகுமார் செயல்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    • மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் உதவி செயற் பொறியாளர் சங்கர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நாளை ஆகஸ்டு 23-ந்தேதி புதன்கிழமை அன்று மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். 

    அதன்படி மதுக்கூர் வடக்கு பகுதியில் பெரமையா கோயில் எதிரே  பெட்ரோல் பங்க் அருகில் மதுக்கூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கென்னடி  தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் பஞ்சாட்சரம், அத்தி.வேதா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    அப்போது மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

    இதில் மாவட்ட செயலாளர் ரெங்கநாயகி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    ×