search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ்"

    • அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
    • ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.

    சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

    அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    எனினும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.

    இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்று கூறி உள்ளார்.
    ×