என் மலர்
நீங்கள் தேடியது "புதிய தேர் வெள்ளோட்டம்"
- ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.
- செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவிலில் நூறாண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் இருந்த தேருக்கு பதிலாக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேரின் வெள்ளோட்டம் தேரோடும் வீதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனா்.பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
- 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் தயார் நிலையில் உள்ளது.
- புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாரா தனை நடைபெறும்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பழமையான தேருக்குப் பதிலாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் தயார் நிலையில் உள்ளது.
இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில், தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும், உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்பை மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும், 120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
கண்ணைக்கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தேரைக் கண்டு ரசிப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
இன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தைத் தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்று மதியம் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
வேங்கிக்கால்:
நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.
வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
- தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.
காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.
தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- ரூ.46 லட்சத்தில் புதிய தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளிலும், தைப்பூசத் தேரோட்டம் ரத வீதிகளிலும் நடைபெறும்.
இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.
தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினத்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு பயன்படும் தேர் பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பதால் சேதமடைந்து இருந்தது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ.46 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (27-ந் தேதி) வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதிய தேரில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தேர் ரத வீதிகளில் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அதனை கண்டு பரவசமடைந்தனர்.
வருகிற தைப்பூசத் தேரோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.