என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coutrallam"

    • குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

    இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மற்றும் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.

    குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு அரிய வகை பழங்கள் குற்றாலம் அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் பொழுதை கழித்து மகிழ்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை அதிகரிக்கும்பட்சத்தில் தண்ணீர் வரத்தும் அதிகரிக்க கூடும். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது.
    தென்காசி:

     தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந் தேதி நடந்தது. 

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 4 வார்டுகளை கைப்பற்றியது. 

    இதனால் தலைவர், துணைத்தலைவர் பதிவிகளை யார் கைப்பற்றுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மார்ச் 4-ந் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றனர். 

    ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து மார்ச் 26-ந் தேதி மறைமுகத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. தேர்தலுக்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் 2-வது முறையாக மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (25-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற்பகலில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. 

     எனவே நாளை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? தலைவர்,  துணைத்தலைவர் பதவிகளை யார்  கைப்பற்றுவார்கள்? என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    தலைவர், துணைத்தலைவர் தேர்தலை போன்றே குற்றாலம் பேரூராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×