என் மலர்
நீங்கள் தேடியது "Power loom workers"
- விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது.
- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
சூலூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களுடனான நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முதல் விசைத்தறியாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சோமனூரில் நடந்த இந்த போராட்டத்தில், சோமனூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது. இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விரைவில் பிரச்சினையை முடித்து தர வேண்டும். தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் விசைத்தறி தொழில் அழிந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசைத்தறி தொழில் நசிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இன்று 2-வது நாளாக விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தால், ரூ.600 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசும், ஜவுளி உற்பத்தியாளர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால், தொழில் மேலும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
- கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.
இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது.
- விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது
இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:-
விசைத்தறி ஜவுளி தொழில் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் உள்ளது. ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சனை, தொழிலாளர்கள் பற்றாக்குறையில் சமாளித்து தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் நூல் விலை கடும் உயர்வு விசைத்தறி ஜவுளி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் தருவதை நிறுத்திவிட்டனர். தற்போது சுமார் 40 சதவீதம் விசைத்தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். விசைத்தறி தொழிலை நம்பி வாங்கிய கடன்கள், வட்டி கட்ட முடியாத நிலையில் உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:-
விசைத்தறி தொழில் ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனாஎன அடுத்தடுத்த சிக்கல்களால் நலிவடைந்துள்ளது. தொழிலை சரிவர மேற்கொள்ள முடியாமல் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வங்கியில் பெற்ற நகைக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கிடையே, ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வருகின்ற நாட்களில், குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் செலுத்த வேண்டும். சீருடை, புத்தகங்கள் போன்ற செலவுகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, இந்த பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று விழிபிதுங்கி உள்ளோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை குறைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூா் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 50 ஆயிரம் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.50 கோடி மதிப்பிலான 1 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு மீட்டா் துணி உற்பத்தி செய்ய ரூ.45 செலவாகிறது. ஆனால் ஒரு மீட்டா் துணி விற்பனை விலை ரூ.40 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது. மேலும் பஞ்சு, நூல் விலை உயா்ந்து தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கம் அடைந்துள்ளது.
இது பற்றி கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-
தொழிலாளா்கள் ஊதியம் அதிகரிப்பு, விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயா்வு ஆகிய சிரமங்களுக்கிடையே இத்தொழிலை நடத்தி வருகிறோம். மேலும் துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்தது. தொழிலாளா்களுக்கு வேலை தரவேண்டிய நெருக்கடி, வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை, வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலா் திவால் ஆகும் நிலையில் உள்ளனா்.
அவா்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில் துறை வளா்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைதரகா் இன்றி ஜவுளி உற்பத்தியாளா்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளா்களுக்கு அரசு தங்கும் விடுதி அல்லது வீட்டுவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா்.