என் மலர்
நீங்கள் தேடியது "பெற"
- மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலு–வலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய–மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்–படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்–பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்.