என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கியவர்"

    • காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.
    • அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    காடையாம்பட்டி;

    காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தீவட்டிப்பட்டியை சேர்ந்த குமார் மகன் ஜெகன் (வயது 21), என்பவர் தனது உறவினரின் குழந்தைகள் நடனம் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி கீழ் வீதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் ரோகித் (22), செல்லையன் மகன் அஜித் (21), ஆகிய இருவரும் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாற்காலி யார் முன்பு போடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பின் பள்ளியில் இருந்து வெளியே ஜெகன் வந்தபோது, அஜித் மற்றும் ரோகித் ஆகியோர் வழிமறித்து தாக்கினார். இது குறித்து ஜெகன் அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் அஜித் மற்றும் ரோகித்தை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள எடயபட்டி கிராமம் கலர்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் எதிரே உள்ள கம்மங்கூழ் கடையில் உள்ள சேரில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்   மாணவனிடம் உட்கார கூடாது என்று கூறி கட்டையால்  தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச் சைக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     
    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×