என் மலர்
நீங்கள் தேடியது "Farmer"
- லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
- பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.
சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.
சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.
இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.
அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
- வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாபேட்டை, வெட்டிக் காடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான அம்மாபேட்டை, விழுதியூர், உக்கடை, புத்தூர், கோவிந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
வயல்களில் தண்ணீர் தேங்கியதற்கும், மழைநீர் வடியாததற்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே காரணம் எனக்கூறி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உடனடியாக வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
- ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு அருகே கோணக்கடுங்காலாறு உடைப்பு ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. இதேப்போல் அம்மாப்பேட்டை, புத்தூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
திருவையாறு, வளப்பக்குடி, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை தொடர்ந்து தோட்டத்தில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாலை இலை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாழை இலைகள் அறுக்க முடியாமல் மரத்திலேயே கிழிந்து வீணாகி வருவதாக விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார்.
இதேப்போல் மழையால் நிலக்கடலை, உளுந்து, செங்கரும்பு போன்ற பல பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 375 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து, வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இன்றி காணப்பட்டது. இதனால் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
- பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .
தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.