என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police"

    • எந்த நரம்பை வெட்டினால் மரணம் ஏற்படும் என்று கூகுளில் முன்னாள் டி.ஜி.பி மனைவி தேடியுள்ளார்.
    • கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. இவரது மனைவி பல்லவி. இவர்களுக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது. கிருதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. குடும்பத்தகராறு மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்திகேஷ் தனது தாய், தங்கை மீது பரபரப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை கைது செய்தனர். அவரது மகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி ஓம்பிரகாஷ் துப்பாக்கியை காட்டி மனைவி, மகளை மிரட்டியதும் பதிலுக்கு அவர்கள் ஓம் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதன் தொடர்ச்சியாகவே சம்பவத்தன்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஓம்பிரகாஷை அவரது மனைவி பல்லவி கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் பல்லவியின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்திய போது அவர் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்து கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை காட்டியதும் தெரியவந்தது.

    அதோடு இல்லாமல் ஓம் பிரகாஷ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பல்லவி கூகுளில் கழுத்து பகுதியில் எந்த நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெட்டினால் ஒருவர் மரணம் அடைவார் என்று தேடியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் ஓம்பிரகாைஷ கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று தகவல் வெளியானது.
    • நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித் துள்ளார்.

    இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.

    அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.
    • கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது.

    கேரளாவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்பி செல்லும்போது நாமக்கல் அருகே பிடிபட்டது.

    அப்போது அந்த லாரியில் இருந்த 7 பேரில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அசார்அலி என்பவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் வைத்து திட்டம் தீட்டி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் கோவையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.

    அதாவது கார்டை சொருகி நம்பரை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையை டைப் செய்து விட்டு காத்திருந்தால் டேப் வரை வந்து பணம் நின்று விடும். அதன்பிறகு பொதுமக்கள் எந்திரத்தில் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுவர்.

    தொடர்ந்து வெளியே காத்திருக்கும் 2 வாலிபரில் ஒருவர் உள்ளே சென்று, எந்திரத்தில் ஒட்டியுள்ள டேப்பை எடுத்துவிட்டு அங்கு குவிந்து நிற்கும் பணத்தை அள்ளி சென்று விடுவார். முதலில் ரத்தினபுரி ஆறு மூக்கு பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கண்ட நூதன பணம் திருட்டு தொடங்கியது.

    பின்னர் அதே வாலிபர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் டேப் ஒட்டி இதேமுறையில் பணத்தை திருடி சென்று உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 வெளிமாநில வாலிபர்கள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அங்கு பணம் வரும் எந்திர பகுதியில் டேப்பை ஒட்டிவிட்டு வெளியே வருகிறார்.

    தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துவிட்டு பணம் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பின்னர் இன்னொரு நபர் உள்ளே சென்று எந்திரத்துக்குள் சிக்கி குவிந்து கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்ட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும கன்டெய்னர் கொள்ளையன் அசார்அலியிடம் காட்டி விசாரணை நடத்தினர். ஆனால் அவன், இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளான். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆவடியில் நடந்த ஏ.டி.எம். பணம் கொள்ளையில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கோவையில் சுற்றி திரியும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சைஃப் அலி கானை 6 இடங்களில் கத்தியால் குத்தியவர் இன்று பிடிபட்டார்
    • இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டார்.

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மர்மநபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகானின் கழுத்து, கை உள்ளிட்ட 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த சைஃப் அலிகான் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது உடல்நலம் தேறி வரும் அவரும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    13 மாடிகள் கொண்ட வீட்டில் 4-வது மாடியில் சைஃப் அலிகான் வசித்து வந்தார். மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்பது புரியாத புதிராக இருந்தது. மேலும் வீட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிராக்கள் இருந்ததும், அதில் மர்மநபரின் உருவம் தெள்ளத்தெளிவாக பதிவாகாததும் மர்மநபரை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது.

    இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வாலிபர் ரெயிலில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தப்பிச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை போலீசார் சத்தீஸ்கரில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேக நபரான ஆகாஷ் கனோஜியா என்பவரை மடக்கி பிடித்தனர்.

    இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் என முதலில் தகவல் பரவியது. ஆனால் போலீசார் அதனை மறுத்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

    சைஃப்  அலிகான் வீட்டில் இருந்த சில சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாக இருந்த காட்சிகளின் பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    இதனடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய முகமது என்பவரை இன்று அதிகாலை போலீசார் தானேவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான முகமது தானேவில் உள்ள ஒரு மதுபாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.  போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை சேகரித்து மும்பையில் பல்வேறு இடங்களிலும் ஒட்டி தீவிரமாக தன்னை தேடுவதை அறிந்த முகமதை தானேவிலேயே பதுங்கி இருக்க திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி தானேவில் உள்ள ஹிராநந்தினி தோட்டத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான பகுதிக்கு அருகே உள்ள தொழிலாளர் முகாமில் தங்கி உள்ளார். இரவு நேரத்தில் அங்குள்ள முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

    போலீசார் அவரை சுற்றி வளைத்ததும், முதலில் தனது பெயர் விஜய் தாஸ் என கூறியுள்ளார். பின்னர் பிஜோய் தாஸ் எனவும், அதன் பிறகு முகமது சஜித் எனவும் கூறியுள்ளார்.

    இறுதியாக விஜய் தாஸ் என பெயரை மாற்றிக்கூறி போலீசை ஏமாற்றி உள்ளார். எனினும் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பணிப்பெண்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமதை போலீசார் மும்பை பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் தீக் ஷித் குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

    நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தை சேர்ந்த அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார். அவரிடம் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் எதுவுமில்லை.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மும்பை வந்துள்ளார். இங்குள்ள வீட்டு வேலை பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபிறகு போலீஸ் விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    ×