என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி"
- வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.நகர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வரின் கருத்து சரியானது. தி.மு.க. செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை காட்டுகிறது.
தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.
வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க. கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ந்தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 'அம்பேத்கர் அம்பேத்கர்' என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்.
- முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை.
கடந்த சில மாதங்களாகவே தி.மு.க.-வுக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் பேசிய வீடியோவை ஆதர் அர்ஜூனா பதிவிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாவும் இதனால் தவெக- விசிக இடையே கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.

இதை அடுத்து புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இப்படி சர்ச்சைகளில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மீண்டும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களை கேட்டுப்பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதையே தான் அனைத்து தோழர்களும் விரும்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-
தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் நாங்கள் முடிவு செய்வோம். முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.
ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 12 தொகுதி வரை நாங்கள் 2011-ல் பேசி தவிர்க்க முடியாத காரணங்களால் அதை 10 என்று இறுதி செய்தோம். ஆகவே எங்களுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம். திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்போது 25 தொகுதிகள் வரை வேண்டும் என்று கூறுவது தி.மு.க.வு.க்கு அழுத்தத்தை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.