என் மலர்
நீங்கள் தேடியது "complimentary"
- செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை:
அங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
ஆண்கள் அணியும் (ஓபன் பிரிவு) பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா (ஓபன் பிரிவு) மற்றும் அவரது சகோதரி வைஷாலி (பெண்கள் பிரிவு) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (ஆண்கள் அணிக்கு விளையாடாத கேப்டன்) அர்ஜூன் கல்யாண் (பெண்கள் அணி பயிற்சியாளர்) ஆகியோரும் இந்திய அணியில் இருந்தனர்.
இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் ஆவார்கள்.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதித்த குகேஷ், பிரக்ஞானந்தா வைஷாலி மற்றும் ஸ்ரீநாத், அர்ஜூன் கல்யாண் ஆகிய 5 கிராண்ட் மாஸ்டர்களுக்கும் வேலம்மாள் நெக்சஸ் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல் மோகன், துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த பரிசு தொகையை வழங்கினார்கள்.
விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது. முன்னதாக 5 கிராண்ட் மாஸ்டர்களும் தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
- ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.
- முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முஜிப். இவர் ரவுண்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட்டு மாதம் 7ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது ஓட்டலில் மொய் விருந்து நடத்தினார்.
ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு அசைவ உணவு வழங்கியதுடன் விருந்தில் பங்கேற்பவர்கள் தங்களால் இயன்ற நிவாரண தொகையை இலைக்கு அடியில் வைத்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்று மொய் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று உதவிகள் அளித்துச் சென்றனர். இதில் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.
இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3.30 லட்சம் நிதியை முஜிப் மற்றும் ஓட்டல் அசோசியேசன் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனை நேரில் சந்தித்து ஆகஸ்ட்டு 14-ந் தேதி வழங்கினர்.
அவரது இந்த சேவையை பாராட்டும் வகையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜிப் வரவேற்றார்.
மாநிலம் கடந்தும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய முஜிப்பை அவர்கள் பாராட்டி நினைவு பரிசு மற்றும் கேரள பாரம்பரியம் கொண்ட கேடயத்தை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனது ஓட்டலில் முஜிப் தலைவாழை இலை விரித்து பிரியாணி மற்றும் பல்வகை அசைவ விருந்து வழங்கினார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.