search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

    • ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஐ.பி.எல். மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் வெளியானது.
    • சென்னை அணி கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். ஜடேஜாவை அந்த அணி தக்கவைத்தது.

    சென்னை:

    டிசம்பர் 23ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

    இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், ராபின் உத்தப்பா (ஓய்வு), கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். அந்த அணி ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துள்ளது.

    • சி.எஸ்.கே, மும்பை உள்பட 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
    • டெல்லி, ஐதராபாத் உள்பட 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

    இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்ததால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    எம்.எஸ்.தோனி , ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

    மீதமுள்ள தொகை: 20.45 கோடி மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

    மும்பை இந்தியன்ஸ்:

    ரோகித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்

    டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்

    மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3 மீதமுள்ள தொகை: 20.55 கோடி

    பஞ்சாப் கிங்ஸ்:

    ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா , ஹர்ப்ரீத் ப்ரார்

    மீதமுள்ள தொகை: 32.2 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்

    மீதமுள்ள தொகை: 42.25 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்

    டிரேடிங் முறையில் வாங்கப்பட்டவர்கள்: ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன்

    மீதமுள்ள தொகை: 7.05 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    குஜராத் டைட்டன்ஸ்:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் நங்வான், தர்ஷன் நங்வான், , ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது

    மீதமுள்ள தொகை: 19.25 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்

    மீதமுள்ள தொகை: 23.35 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

    பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், மஹிபால், மஹிபால். சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

    மீதமுள்ள தொகை: 8.75 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், சாஹல், சாஹல். , கே.சி கரியப்பா

    மீதமுள்ள தொகை: 13.2 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:

    ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி அகமது , முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்

    மீதமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் - 2

    • சென்னை அணி அதிரடி வீரர் பிராவோவை விடுவித்துள்ளது.
    • ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள்

    சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)

    மும்பை இந்தியன்ஸ்:

    கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

    பஞ்சாப் கிங்ஸ்:

    மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்

    குஜராத் டைட்டன்ஸ்:

    ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

    ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா

    டெல்லி கேபிட்டல்ஸ்:

    ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மந்தீப் சிங்

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது.
    • 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

    16-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23-ந்தேதி கொச்சியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான வீரர்கள் தக்க வைப்பு, விடுப்பு பட்டியலை 15-ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க கெடுவிதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் விவரத்தையும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரங்களையும் வெளியிட்டுள்ளன.

    10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 85 வீரர்களை விடுவித்து உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஓய்வு பெற்ற பொல்லார்டு, பேபியன் ஆலன், மில்ஸ் உள்பட 13 வீரர்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன் உள்பட 12 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வால், ஓடியன் சுமித் உள்பட 9 வீரர்களையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் உள்பட 16 வீரர்களையும் விடுவித்தன.

    பெர்குசன், ஜேசன் ராய் உள்பட 6 வீரர்கள் குஜராத் அணியில் இருந்தும், மனிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர் உள்பட 7 பேர் லக்னோ அணியில் இருந்தும், ரூதர் போர்டு உள்பட 5 பேர் பெங்களூர் அணியில் இருந்தும், ஜேம்ஸ் நீசம், கருண் நாயர் உள்பட 9 பேர் ராஜஸ்தான் அணியில் இருந்தும், ஷர்துல் தாகூர் உள்பட 5 வீரர்கள் டெல்லி அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டன.

    10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.20.45 கோடி கையிருப்பு இருக்கிறது. பெங்களூர் அணியிடம் ரூ.8.75 கோடி யும், ராஜஸ்தானிடம் ரூ.13.2 கோடியும், டெல்லியிடம் ரூ.19.45 கோடியும், மும்பை யிடம் ரூ.20.55 கோடியும், பஞ்சாப்பிடம் ரூ.32.2 கோடியும், கொல்கத்தா விடம் ரூ.7.05 கோடியும், குஜராத்திடம் ரூ.19.25 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.42.25 கோடியும், லக்னோ விடம் ரூ.23.75 கோடியும் கையிருப்பு இருக்கிறது.

    • வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும்.
    • மும்பை அணிக்கு உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது.

    மும்பை:

    ஐபிஎல் 2023-ம் ஆண்டு தொடருக்காக மும்பை அணி மீண்டும் பெரிய தவறை செய்துள்ளதாக வசீம் ஜாஃபர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இதில் அனைத்து அணிகளும் முன்னணி வீரர்களை கூட விடுவித்து பெரிய முடிவுகளை எடுத்திருந்தது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல பெரும் வியூகத்தை அமைத்துள்ளது. மும்பை அணி பட்டியல் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மீண்டும் மும்பை அணியிலேயே இணைந்துள்ளார்.

    ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு விளையாடிய அவரை ட்ரேடிங் முறையில் மும்பை அணி வாங்கியுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்தால், ட்ரெண்ட் போல்ட் இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இந்நிலையில் மும்பை அணி சுழற்பந்து வீச்சில் வீக்காக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் பேசியுள்ளார்:

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் பும்ரா நல்ல காம்போ தான். ஆனால் அவர்களுடன் இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பெரிய பிரச்சினை.

    ஏனென்றால் உலக தரத்தில் வேறு வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இந்திய இளம் வீரர் ஆகாஷ் மாத்வால் சற்று சிறப்பாக செயல்படுவார். இதே போல சுழற்பந்துவீச்சிலும் மும்பை வீக்காக உள்ளது. மயங்க் மார்காண்டே, முருகன் அஸ்வின் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஃப் ஸ்பின்னர் ஹிர்திக் சோக்கீன் மிகக்குறைவான போட்டியிலேயே ஆடியுள்ளர். மேலும் வான்கடேவில் ஆஃப் ஸ்பின் எடுபடாது. குமார் கார்த்திகேயா ஓரளவிற்கு சிறப்பாக உள்ளார். ஆனால் வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும். உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது.

    ஏனென்றால் டிம் டேவிட் நிச்சயம் ஆடுவார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆர்ச்சர், பெஹண்டோர்ஃப் ஆகியோரும் ஆடுவார்கள். இப்படி இருக்கையில் ப்ளேயிங் 11-ல் அயல்நாட்டு ஸ்பின்னர் சூட் ஆக மாட்டார். எனவே இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களுக்கு தான் வலைவிரிக்க வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

    • அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

    மும்பை:

    2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

    ஏலத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்வது கடந்த நவம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க 991 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 714 பேர் இந்தியர்கள். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசி லாந்தில் இருந்து 27 வீரர் களும், இலங்கையில் இருந்து 20 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    மொத்தம் 277 வெளி நாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை தான் ஏலத்தில் தேர்வு செய்ய முடியும்.

    பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1.50 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் என உள்ளது. இதில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

    • கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.
    • தலையில் அடிபட்டு அதிர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறங்க முடியும்

    கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம். ஆனால் இவரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது.

    இதனால், ஒரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயம் அடைந்தால், அந்த அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். அதேபோல்தான் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், பந்து வீச்சில் சிரமம் ஏற்படும்.

    இதனால் மாற்று வீரர்கள் ஏன் ஆக்டிவ் வீரராக செயல்படக் கூடாது? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அது ஒரு அணிக்கு சாதகமாக முடிந்து விடும் என்பதால் ஐ.சி.சி. இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையை அமல்படுத்தாமல் உள்ளது.

    சில வருடங்களுக்கு முன், ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவரால் விளையாட முடியாது நிலை ஏற்பட்டால், மருத்துவர்கள் அறிவுரையின்படி மாற்று வீரரை களம் இறக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மாற்று வீரரை அக்டிவ் வீரராக செயல்பட பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது.

    ஒரு அணியில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்கலாம். 7 இந்திய வீரர்கள் இடம் பெறவேண்டும். தற்போது இந்திய வீரரை மட்டும் மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    அதன்படி மாற்று வீரராக களம் இறங்கும் வீரர் பந்து வீச முடியும். பேட்டிங் செய்ய முடியும். கால்பந்து, ரக்பி போன்ற போட்டிகளில் மாற்று வீரர்கள் ஆக்டிவ் வீரராக செயல்படுவார்கள். அதேபோன்று இதிலும் கொண்டு வர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சையது முஷ்டாக் அலி தொடரில் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கு வரவேற்பு கிடைக்கவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரவிருக்கிறது.

    ஆனால், அதுகுறித்து முழுமையாக விதிமுறையை பி.சி.சி.ஐ. இன்னும் வெளியிடவில்லை. ஐ.பி.எல். அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் இறுதி முடிவை அறிவிக்கும்.

    • ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கொச்சியில் இன்று நடக்கிறது.
    • ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹாரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழகத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

    இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20.45 கோடி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.42.25 கோடி

    பஞ்சாப் கிங்ஸ் - ரூ.32.2 கோடி

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.23.35 கோடி

    மும்பை இந்தியன்ஸ் - ரூ .20.55 கோடி

    டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ .19.45 கோடி

    குஜராத் டைட்டன்ஸ் - ரூ.19.25 கோடி

    ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .13.2 கோடி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .8.75 கோடி

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .7.05 கோடி

    • ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை சாம் கர்ரன், கேமரூன் ஆகியோர் படைத்தனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்சை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்றுது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


    ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீரர்களின் விவரம் வருமாறு:

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    நிகோலஸ் பூரன் -ரூ.16 கோடி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    ஷிபம் மாவி - ரூ. 6 கோடி ( குஜராத் டைட்டன்ஸ்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    முகேஷ்குமார் - ரூ.5.50 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்)

    ஹென்ரிச் கிளாசன் - ரூ.5.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் ஆகியோர் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

    • 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது.
    • இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம்:

    ரகானே: ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

    பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

    ஷேக் ரஷீத்: ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    நிஷாந்த் சிந்து: ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

    கைல் ஜேமிசன்: நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

    அஜய் மண்டல்: சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

    எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

    • நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன்.
    • சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்தது.

    இதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம்கரண் அதிகபட்சமாக ரூ.18½ கோடிக்கு ஏலம் போனார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை எடுத்தது.

    அவருக்கு அடுத்த படியாக கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) அதிகபடியான தொகைக்கு ஏலம் போனார்கள்.

    ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு காலக்கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய சீனியர் வீரர் சந்தீப் சர்மாவை இந்த முறையாரும் கண்டு கொள்ளவில்லை. ஐ.பி.எல். ஏலத்தில் அவர் விலை போகவில்லை. எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால் சந்தீப் சர்மா ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஏமாற்றமும் அளிக்கிறது. நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நினைத்தேன். இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. உள்ளூர் போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசி வருகிறேன்.

    இவ்வாறு சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

    அவருக்கு நிர்ணக்கப்பட்ட அடிப்படை விலை ரூ.50 லட்சம் தான். அப்படி இருந்தும் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார். 

    ×