என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் கிரிக்கெட் மினி ஏலம் - கொச்சியில் இன்று நடக்கிறது

- ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கொச்சியில் இன்று நடக்கிறது.
- ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும்.
கொச்சி:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹாரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழகத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20.45 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.42.25 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.32.2 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ .20.55 கோடி
டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ .19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.19.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .13.2 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .7.05 கோடி