search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student"

    • காரில் எம்டி.எம்.ஏ. போதைப்பொருள் மறைத்து கடத்துவது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக புகார்கள் உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமா நிலங்களில் இருந்தும் இங்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கேரள மாநில போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொச்சி அருகே உள்ள திருப்பணித்துறையில் வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தும்படி கூறினர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்தக் காரில் ஒரு இளம்பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் எம்டி.எம்.ஏ. போதைப்பொருள் மறைத்து கடத்துவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

    அந்தக் காரில் வந்த பெண் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் எட்டுமானூர் அமீர் மஜித் மற்றும் சங்கனாசேரி வர்ஷா என தெரியவந்தது. இதில் வர்ஷா, பெங்களூரூவில் நர்சிங் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    ×