என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்த்திக் பாண்ட்யா"
- ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
- முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
பேட்டிங் செய்வது மிக எளிதாக இருந்ததாக சூர்யகுமார் யாதவ் சக வீரர்களிடம் தெரிவித்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவரது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.
நான் அவருக்கு பந்து வீசினால் சூர்யகுமார் யாதவின் ஷாட்களை பார்த்து என் மனம் உடைந்து விடும். ராகுல் திரிபாதியும் நன்றாக ஆடினார்.
இதேபோல அக்ஷர் படேலை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன். இந்த தொடர் வீரர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர்கள் ஆவார்கள்.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
அடுத்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
- சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார்.
ராஞ்சி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றியது.
அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.
இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இது தொடர்பாக கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார். பிரித்விஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு (முகமது ஷமி, முகமது சிராஜ்) ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை.
புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்போதும் ரசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக நான் வலைகளில் பந்து வீசும் போதெல்லாம் புதிய பந்தை தேர்வு செய்கிறேன்.
கடந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால் தொடக்கத்தில் நான் பந்து வீச தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்போதும் அழுத்தமாக இருந்ததில்லை. பயிற்சியில் ஈடுபட்ட நாங்கள் டோனியை சந்தித்தோம். அவரை சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது.
நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.
- ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
- எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது.
லக்னோ:
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.
லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் சான்ட்னெர் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் (அவுட் இல்லை), இஷான் கிஷன் 19 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்ட னர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல.
கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
- அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.
நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.
ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.
லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.