என் மலர்
நீங்கள் தேடியது "கோடை காலம்"
- கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது.
- கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. குடிநீர் குழாய், மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் குடிநீர் சப்ளை அதிகரித்து 1020 மி.லிட்டர் மற்றும் 1060 மி.லிட்டராக வினியோகிக்கப்படுகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.
சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
இதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் சப்ளை இருக்கும். தற்போதைய நிலவரப்படி சென்னையில் தினமும் 1500 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது என்றார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடி நீர் ஏரிகளில் 8080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2813 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2838 மி.கனஅடியும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1774 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் 8 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.
- வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 10-ந் தேதி வரை கடுமையான வெப்ப நிலை இருக்கும் என தெரிவித்துள்ளது.
கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
இதேபோல் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியசும், திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வருகிற 10-ந் தேதி வரை மலைப்பாங்கான பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வெப்பமான நிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
- நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக அடித்து வந்தது. இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
பாலக்காடு, புனலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.
மேலும் மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் அம்மை உள்ளிட்ட கோடைகால நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
அங்கு கடந்த 10 நாட்களில் 900 பேருக்கு மேல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 90 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்நிலையில் கோடை வெயிலின் காரணமாக கோர்ட்டுகளில் கருப்பு கோர்ட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அது தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம் என்று கூறியிருக்கிறது. இந்த சலுகை அடுத்தமாதம் (மே)31-ந்தேதி வரை வக்கீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.