search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.
    • மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 43-வது வார்டு சோழன் நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

    இன்று அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    திறப்பு விழாவிற்கு வந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தான் ஆள்துளை கிணறை தொடங்கி வைக்காமல் அந்தப் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமி ஐஸ்வர்யா என்பவரை ஆழ்துளை கிணறை தொடங்கி வைக்க செய்தார்.

    தொடர்ந்து அந்த சிறுமியை ஊக்கப்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேயர் சண். ராமநாதனின் இந்த செயலை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர்.

    மேலும் மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தொடர்ந்து சிறுமிக்கு ஐஸ்வர்யா என்று தமிழில் பெயர் வைத்ததற்காக அவரது பெற்றோரை மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் சோழன் நகர், பாலாஜி நகர் பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    இதையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உடனே நிறைவேற்றுவதாக மேயர் சண். ராமநாதன் உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர் ஹைஜாகனி, ஒப்பந்ததாரர் பாரி, குழாய் பொருத்துனர் பிரபாகர், 43- வது வார்டு செயலாளர் ராஜரத்தினம் என்ற ஜித்து, பகுதி பிரதிநிதி வாசிம்ராஜா, 45-வது வார்டு செயலாளர் சுரேஷ் ரோச் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது.
    • கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. குடிநீர் குழாய், மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் குடிநீர் சப்ளை அதிகரித்து 1020 மி.லிட்டர் மற்றும் 1060 மி.லிட்டராக வினியோகிக்கப்படுகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

    சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் சப்ளை இருக்கும். தற்போதைய நிலவரப்படி சென்னையில் தினமும் 1500 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது என்றார்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடி நீர் ஏரிகளில் 8080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2813 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2838 மி.கனஅடியும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1774 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் 8 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    ×