என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள்"

    • குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி.
    • சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏைழ, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 10-ம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

    இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    • ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.
    • தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் தலைமையகத்தில் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர் மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

    நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.

    அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றம் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மண்டல பொதுமேலாளர்கள் இளங்கோவன் (கும்பகோணம்), சக்திவேல் (திருச்சி), சிவசங்கரன் (கரூர்), சிங்காரவேல் (காரைக்குடி), இளங்கோவன் புதுக்கோட்டை), முதன்மை கணக்கு அலுவலர் சிவக்குமார், துணை மேலாளர்கள் முரளி, கணேசன், உதவி மேலாளர்கள் வடிவேல், ராஜசேகர், கலைவாணன், நாகமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×