search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training"

    • தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது?
    • உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது?

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தீ தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பயிற்சி பெற்றார்.

    மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது, உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது, தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ள ப்பாதிப்பு ஏற்பட்டாலும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மேற்பா ர்வையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×