என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95018"

    ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    ஐபோன்

    அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

    இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை 12 வீரர்கள் புதுமுகங்கள். இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

    லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் தீவிரம் காட்டுவதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 
    இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை தாம் எதிர்நோக்கி உள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
    கொழும்பு:

    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர்  கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப்,  நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில்  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு  பாராட்டு தெரிவித்ததாகவும்,  மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு டுவீட்டில், இலங்கைக்கு உதவ வெளிநாட்டு உதவி கூட்டமைப்பை அமைப்பதில் குவாட் உறுப்பு நாடுகள் முன்மொழிந்துள்ளதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.


    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி, இன்று வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது. 

    இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    ஜகார்த்தா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.

    இதில், இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருந்தது.
    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர்  மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார். 

    அப்போது உணவுப் பாதுகாப்பு மற்றம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

    இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா உரம் கொடுத்து உதவுமாறு அப்போது மகிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா கடந்த மாதம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.20 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * 88.6 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பிறந்துள்ளன. முந்தைய சர்வேயில் இது 78.9 சதவீதமாக இருந்தது. இது இந்தியா ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பதை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.

    * இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது.

    * பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளன.

    * குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்தது.

    * ஐந்தில் நான்கு தாய்மார்கள் அதாவது 78 சதவீத தாய்மார்கள் பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பை பிரசவித்த 2 நாட்கள் வரையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மூலம் பெற்றுள்ளனர். முந்தைய சர்வேயில் இது 62.4 சதவீதமாக இருந்துள்ளது. இது பிரசவத்தின்போதும், அதற்கு பின்னரும் குழந்தைகள் இறப்பை தடுக்கும்.

    கர்ப்பிணி பெண்

    * மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது. முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.

    * குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதம் ஆகும்.

    * 41 சதவீத குடும்பங்களில் குறைந்தது ஒருவராது சுகாதார காப்பீடு செய்துள்ளனர். முந்தைய சர்வேயில் இது 28.7 சதவீதமாக இருந்துள்ளது.

    * தற்போது திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை (கருத்தடை முறைகள்) பயன்படுத்துகின்றனர்.

    * நாட்டில் தற்போது திருமணமான 15-49 வயது பெண்களின் குடும்ப கட்டுப்பாட்டு தேவை 9.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2015-16-ல் 12.9 சதவீதமாக இருந்துள்ளது.

    * 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கடந்த சர்வேயில் இருந்து இந்த சர்வேயில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

    இவ்வாறு குடும்ப சுகாதார சர்வே முடிவுகள் காட்டுகின்றன.


    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதற்கு மறுநாள், இந்திய-பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒன்றுக்கொன்று சண்டையில் ஈடுபட்டன. அப்போது, இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனுக்கு நேற்று முன்தினம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

     இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன்

    இந்தநிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

    2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம். எங்கள் விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இது அடிப்படையற்றது. எப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுத்து, சர்வதேச நிபுணர்களும், அமெரிக்க அதிகாரிகளும் இதை அப்போதே உறுதிப்படுத்தி உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் என்று காட்டவே அந்த விமானியை விடுதலை செய்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் கூட்டுப் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என இம்ரான் கான் தெரிவித்தார்.
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப உள்ளதாக அறிவித்தது. மேலும், இந்த பொருட்களை வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் வழியாக அனுப்ப அனுமதிக்கும்படி பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இதனை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போக்குவரத்து நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் இந்தியா 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப அனுமதி அளிக்கப்படும், என்றார்.

    புதிதாக நிறுவப்பட்ட ஆப்கானிஸ்தான் அமைச்சர்கள் ஒருங்கிணைப்புப் பிரிவின் முதல் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இம்ரான் கான், மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் கூட்டுப் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்றார்.

    தற்போது, ​​பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் எல்லை வழியாக வேறு எந்த இருவழி வர்த்தகத்தையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
    துபாய்:

    ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு

    அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.

    2024 - 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
    2025 - சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

    2026 -  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை
    2027 - 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

    2028 - 20 ஓவர் உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
    2029 - சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

    2030 - 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
    2031 - 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

    பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×