என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95209"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த வாரம் 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,824-க்கு விற்றது.

    மறுநாள் 17-ந்தேதி அது 38 ஆயிரத்தை தாண்டியது. 18-ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 19-ந்தேதி மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி ரூ.38,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    20-ந்தேதி ரூ.38,344-க்கும், 21-ந்தேதி ரூ.38,536-க்கும் விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,648-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,817-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது.

    அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,100-க்கு விற்பனையாகிறது.
    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 775 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60 ஆக உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது
    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 67 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,696-க்கு விற்கப்பட்டது.

    24-ந்தேதி அது ரூ. 38,680 ஆக குறைந்தது. மறுநாள் ரூ.38,440 ஆக குறைந்தது. மே 26-ந்தேதி ரூ.38,120 ஆக குறைந்தது.

    அதன் பிறகு கடந்த 27-ந்தேதி சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,200-க்கு விற்றது. 28 மற்றும் 29-ந்தேதிகளில் தொடர்ந்து அதே விலையே நீடித்தது.

    கடந்த திங்கட்கிழமை விலை மேலும் உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38,200 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    1 கிராம் தங்கம் நேற்று ரூ.4,775-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில்,  தி. கவுண்டம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பலமகாதேவி, வடகரையாத்தூர், ஆனங்கூர், கண்டிப்பாளையம், கு. அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், நன்செய் இடையார், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். 

    வாழைத்தார் விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு  வந்து  தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ 400-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 300-க்கும் ,ரஸ்தாலி வாழைத்தார்ரூ 300-க்கும் ,பச்சநாடன் வாழைத்தார் ரூ 250-க்கும், மொந்தன் வாழைத்தார் 300-க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ 500 க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 350 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ 350 க்கும், பச்சநாடன் வாழைத்தார் 
    ரூ 300க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ400 க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,400-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம், இந்த வார தொடக்கத்திலும் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது. கடந்த 30-ந்தேதி (திங்கட்கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31-ந்தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.

    அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுன் விலை ரூ.38,080 ஆக உயர்ந்தது. இன்று மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

    ஒரு கிராம் நேற்று ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4 ஆயிரத்து 775 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,024-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 24-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 503 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து 68 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,968-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டு வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.35,968-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,496 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டதால் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் கடந்த 20-ந்தேதி பவுன் ரு.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதற்கிடையே தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் குறைந்தபடியே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரு.768 குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரு.36 ஆயிரத்து 136-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 517-க்கும் விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்தபடி உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.67 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.67.60-க்கு விற்கிறது.

    தங்கம் விலை கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர் சரிவு நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மேலும் விலை குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
    கொடைக்கானலில் அனைத்து காய்கறிகளும் விலை உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்து வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மலைக்கிராமங்களில் விளையும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், தரைப்பகுதிகளில் விளையக்கூடிய அவரை, கத்தரி, வெண்டைக்காய், கருணை கிழங்கு, தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான காய்கறிகள் ரூ.100க்கும் அதிகமாக இருந்ததால் சாமானிய மக்கள் அதனை வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளான கத்திரிக்காய் கிலோ ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, பீன்ஸ் ரூ.120, தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.120, பாகற்காய் ரூ.120, பட்டர் பீன்ஸ் ரூ.180, சிவப்பு பவளபீன்ஸ் ரூ.180, குடை மிளகாய் ரூ.180, பெங்களூர் தக்காளி ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் இந்த திடீர் விலை ஏற்றத்தினால் அவதியடைந்து குறிப்பிட்ட சில காய்கறிகளை சிறிதளவு மட்டும் வாங்கிச் சென்றனர். மேலும் வாரச்சந்தையில் முறையாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்கறிகள் விலை உயர்வுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.
    நெல்லை:

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக காய்கறிகள் விளைச்சல் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்டவற்றில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வந்து சேரும். ஆனால் தொடர்மழையால் அங்கும் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. வெள்ளை நிற கத்திரிக்காய் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. பச்சை நிற கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

    இது தவிர அவரைக்காய் கிலோ ரூ.130-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட் கிலோ ரூ.70 முதல் 90 வரையும், புடலைங்காய் ரூ.75-க்கும் விற்கப்பட்டது.

    பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் 50 வரை தரத்திற்கேற்ப விற்கப்பட்டது. முருங்கைக்காய் ரூ.75-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50 வரையிலும் விற்பனையானது.

    இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரியான சிவா கூறுகையில், பாளை மார்க்கெட்டுக்கு தென்காசி மாவட்டத்தை அடுத்து மதுரை மார்க்கெட்டில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரும். சில நேரங்களில் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வரத்து இருக்கும்.

    மதுரையில் இருந்து வரும் தக்காளிகள் 28 கிலோவாக ஒரு பெட்டியில் போடப்பட்டு மார்க்கெட்டுக்கு வரும். இவற்றின் விலை இன்று ரூ.3,200 ஆக இருக்கிறது. இதே போல் ஆந்திராவில் இருந்து 15 கிலோ ஒரு பெட்டியில் போடப்பட்டு ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாளை மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வந்துள்ளதால் ரூ.120 வரை விற்கப்படுகிறது. மதுரையில் இருந்து கொள்முதல் செய்தால் ரூ.150 வரையிலும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

    இதனால் வியாபாரிகளின் லாபத்தையும் சேர்த்து விற்பனை செய்யும் போது காய்கறிகளின் விலை அதிகரித்து விடுகிறது என்றார்.
    ×