என் மலர்
நீங்கள் தேடியது "tag 96187"
போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் நியோ வேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் ப்ரோ மற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் போட் அறிமுகம் செய்து இருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய போட் வேவ் நியோ மாடல் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
போட் வேவ் நியோ மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. போட் வேவ் நியோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் அம்சங்கள், ஒரு வார பேட்டரி லைஃப், ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

போட் வேவ் நியோ அம்சங்கள்:
- 1.69 இன்ச் 454x454 பிக்சல் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே
- 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
- ஸ்டிரெஸ் டிராக்கர், அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர்
- பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- IP68 சான்று
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி
- 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
புதிய போட் வேவ் நியோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமேஸ்பிட் GTS 2 மினி நியூ வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த அமேஸ்பிட் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் ஜிடிஆர் 2 நியூ வெர்ஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் GTS 2 நியூ வெர்ஷனை அடுத்த வாரம் இந்தியாவில் லாஞ்ச் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 2 மாடலைப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்GTS 2 நியூ வெர்ஷன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பெட்டல் பிங்க் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷனில் 1.65 இன்ச் AMOLED 341PPI ஸ்கிரீன் மற்றும் curved கிளாஸ் உடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐ.ஒ.எஸ். 10.0 சப்போர்ட் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட், ஸ்டெப் கவுண்ட், கலோரி கவுண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மற்றும் ஸ்டிரஸ் லெவலையும் கண்காணிக்கும்.
இதுதவிர வாட்டர் ரெசிஸ்டன்ட், புளுடூத் 5.0, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட், 6 நாட்கள் வரை நீடிக்கும் 246mAh பேட்டரி, ஜிபிஎஸ், புளுடூத் காலிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை jt. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப் உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கிறது. மெட்டல் பினிஷ் கொண்டிருக்கும் நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 மாணிட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் பிட்1 சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 விரைவில் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ரியல்மி வாட்ச் 2 மாடலை அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு நிறத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி வாட்ச் 2 கோல்டு நிற வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சந்தை வல்லுநரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்வாட்ச் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்
- 1.4 இன்ச் 320x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
- ப்ளூடூத் 5.0
- 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ2 சென்சார்
- நோட்டிபிகேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (ஐ.பி.68)
- 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாத வாக்கில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கிய முதல் 15 நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய 40 நாட்களில் டிசோ வாட்ச் 2 மொத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை வாட்ச் 2 பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. டச் ஸ்கிரீன், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூவாய் வாட்ச் பிட் பெரிய டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் மாடலில் 1.64 இன்ச் விவிட் அமோலெட் டிஸ்ப்ளே, 97 வொர்க்-அவுட் மோட்கள், நாள் முழுக்க எஸ்.பி.ஓ2 டிராக்கிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள், 12 அனிமேட் செய்யப்பட்ட பிட்னஸ் பயிற்சிகள் உள்ளன.

இந்தியாவில் புதிய ஹூவாய் வாட்ச் பிட் விலை ரூ. 8990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை நாளை (நவம்பர் 2) அமேசான் தளத்தில் துவங்குகிறது. புது ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு அசத்தலான அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிட் சாதனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் அன்பேக்டு விழாவில் அந்நிறுவனம் கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி பட்ஸ் சாதனமும் அறிமுகமாகலாம்.
கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஐகான் எக்ஸ் (2018) மாடலில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டிருந்தது.

இதுதவிர புதிய இயர்போனில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலை போன்றே புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனிலும் புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி ஃபிட் சாதனத்தின் அம்சங்கள் சாம்மொபைல் வலைதளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஃபிட் சாதனம் SM-R370 மற்றும் SM-R375 மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இருசாதனங்களிலும் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஃபிட் என்ற பெயர் கொண்டிருக்கிறது.
புதிய சாதனத்தில் இசிம் வசதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சாம்சங் நிறுவனம் ஐந்து கேலக்ஸி எஸ்10 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் 5ஜி வேரியன்ட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அடங்கும். இவற்றுடன் கேலக்ஸி ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறி்முகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch
ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.
புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.
அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது.


ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.
எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்ட ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஃபாசில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. #Fossil #smartwatch
ஃபாசில் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் மற்றும் கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது.
இத்துடன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், புதிய பேட்டரி சேவிங் மோட், மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மோட், இன்டகிரேட் செய்யப்பட்ட இதயதுடிப்பு சென்சார், என்.எஃப்.சி., மற்றும் ஜி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் 41 மற்றும் 43 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
350 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் ரேபிட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி சேவிங் மோட் இரண்டு நாட்கள் டெல்லிங் டைம் வழங்ங்குகிறது. கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருப்பதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் ஃபிட் சேவைகளை பயன்படுத்த முடியும்.

இதய துடிப்பு சென்சார், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய செயலிகள் ஆட்டோ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பாடிஃபை மற்றும் நூன்லைட் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
18 எம்.எம். மற்றும் 22 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் பிரேஸ்லெட்களில் மாற்றக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட சாதனங்களில் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும். வயர்லெஸ் சின்கிங் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் வசதிகளை சப்போர்ட் செய்கிறது.
ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை 225 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.18,440 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது.