என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97581"

    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.
    காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது.

    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

    பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், ஓரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரொளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    மாசாணியம்மன் கோவிலில் மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.
    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம்.

    மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார்.

    ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
    குமாரபாளையத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வைகாசி வெள்ளிக்கிழமையையொட்டி   குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. 

    இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன்   கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. 

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி.
    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி. அவளை மகாகவி காளிதாசர், பாஸ்கர ராயர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் வணங்கி அருள் பெற்றனர் என்பது வரலாறு. தச மகா வித்யைகளுள், மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யா ரூபம் ஆவாள். சரஸ்வதியின் சொரூபமாக உள்ள சியா மளாதேவி வழிபாடு என்பது, சங்கீதத்தில் ஒருவரை பிரபலம் அடையச்செய்யும் என்பதும் ஐதீகம்.

    * அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி -சியாமளா சக்தி பீடமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.

    * காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் ராஜ சியாமளா தேவியின் அழகிய உருவத்தை தரிசனம் செய்யலாம்.

    * புதுக்கோட்டை புவனேஸ்வரி கருவறைக்கு முன்புறத்தில் ராஜ மாதங்கியை தரிசனம் செய்யலாம்.

    * சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறைக்கு முன்புறம் நின்ற கோலத்தில் மாதங்கியை தரிசிக்கலாம்.

    * சேலம், மன்னார்பாளையத்தில் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் ராஜ மாதங்கி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    * திருப்போரூர், செம்பாக்கம் ஸ்ரீ பீடம் பாலா சமஸ்தானத்தில் ராஜ மாதங்கி கோவில் இருக்கிறது.
    ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.
    கல்வி மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக இருப்பவள் ராஜமாதங்கி ஆவாள். ஒப்பற்ற அழகும், அனைவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்ட ராஜமாதங்கிக்கு, ராஜ சியாமளா, காதம்பரி, வாக் விலாஸினி என்ற பெயர்களும் உள்ளன. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள் வரை ஆன்மிக சான்றோர்கள் பலரும் இந்த அன்னையை வழிபட்டு சிறப்படைந்துள்ளனர்.

    ஆதி பராசக்தியின் மந்திரிணியாக இருந்து ஆலோசனைகள் சொல்லும் இவள், சாக்த வழிபாட்டில் சப்த மாதர்களில் ஒருவராகவும், தசமகா வித்யைகளில் ஒன்பதாவது நிலையிலும் இருக்கிறாள். இந்தியாவின் வட மாநிலங்களில் இவளை ‘சியாமளா தேவி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘நீலம் கலந்த பச்சை நிறம்’ என்று பொருளாகும். ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

    மதங்க முனிவரின் மகள்


    இறைவனின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார் மதங்க முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஈசனிடம், “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்றும், “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்படியே சிவனும் அருளினார்.

    மகாசக்தி மனித உருவம் எடுக்க இயலாது என்பதால், அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தாள். அது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமையாகும். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே ராஜமாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. மாதங்கி பருவம் அடைந்ததும், ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில், சிவபெருமான் மதங்கேஸ்வரராக வருகை புரிந்தார். மாதங்கிக்கும், ஈசனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது என்று திருவெண்காடு தல புராணம் கூறுகிறது.

    திருமணத்தின்போது, அன்னை மாதங்கிக்கு எவ்விதமான சீர் வரிசையும் செய்யப்படவில்லை. அகிலத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் நாயகிக்கு, தம்மால் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் அமைதியாக இருந்துவிட்டார். ‘ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர் வரிசை இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது’ என தேவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் சிவனே தலையிட்டு, “சீர்வரிசை தருவதும், பெறுவதும் தவறு” என்று கண்டித்தார்.

    “சீர் பெறுவது திருமணச் சடங்குகளில் ஒன்று” என பிரம்மா கூறியதை அடுத்து, சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினை கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தல புராணம் தெரிவிக்கிறது.

    அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின், அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். லலிதா சகஸ்ர நாமம், ஸ்ரீசாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற பல நூல்களில் ராஜ மாதங்கியின் புகழ் போற்றப்படுகிறது.

    இந்த தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு- உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூலநட்சத்திர நாளன்று அவதரித்தார். சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாளை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலசந்தி பூஜைக்குபின் காலை 9 மணியளவில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை பாடிய பின்னர் திருஞானசம்பந்தர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். மேலும் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம்தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு மிதந்து வரும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும்.

    கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை சுமார் 5 மணி அளவில் கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் புறப்படும். ஊர்வலம் தரணம்பேட்டை, என்.ஜி.செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

    அம்மன் சிரசு ஊர்வலம் வருகிற வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்வார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும் நேர்த்திக்கடனாக பலர் அம்மன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வழிபடுவார்கள். சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவை ஊர்வலத்தினை பின்தொடர்ந்து நடைபெறும்.

    கெங்கையம்மன் கோவிலை சிரசு வந்தடைந்த பின்னர் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாந்த சொரூபியாக மாறும் கெங்கைஅம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள் பாலிக்கிறார். பின்னர் இரவு 8 மணி அளவில் சண்டாளச்சி உடலில் இருந்து பிரிக்கப்பட்ட அம்மன் சிரசு வீதிஉலாவாக கவுண்டன்ய நதியின் வழியே சென்று புங்கனூர் அம்மன் கோவிலை அடையும். அப்போது கண்ணை கவரும் சிறப்பு வாண வேடிக்கை நடைபெறும்.
    வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.
    “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
    ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
    வசங்கரி தனம் வர்ஷய
    வர்ஷய ஸ்வாஹ:”

    பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை தேரோட்டம், 18-ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு உள்ளவர்கள் வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.

    சக்தியின் அம்சமாக விளங்கும் இவள், ஆணவத்தை அடக்கி பக்தர்களைக் காப்பதிலும் அருள்புரிகிறாள். கலைத்துறையில் ஈடுபட விரும்புபவர்கள், கலைத்துறையில் வெற்றிபெறவும். வளர்ச்சியோடு நீடித்த புகழை பெறவும் இந்த திதி நித்யா தேவி விஜயா அருள்புரிகிறாள்.
     
    நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் விரதம் இருந்து சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    நீங்கள் வளர்பிறை துவாதசி அல்லது தேய் பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி விஜயா. அன்றைய தினம் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி, விஜயாவை வணங்கினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கலைத்துறையில் வளர்ச்சி ஏற்படும்.

    மூலமந்திரம்:

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.
    ×