என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • சி வோட்டர் நடத்திய கணக்கெடுப்பில் 27% பேர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளார்.
    • த.வெ.க. தலைவர் விஜயை 18% பேர் தேர்வு செய்துள்ளனர்.

    தேர்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் சி.வோட்டர் நிறுவனம் தற்போதைய தமிழக அரசி யல் நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

    அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியானது. அதில் தமிழக அரசியல் தலைவர்கள் செல்வாக்கு தொடர்பாக பல்வேறு ருசிகர தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இப்போது தேர்தல் நடந்தால் முதல்-மந்திரி பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நெருங்கி வரும் வகையில் விஜய்யை முதல்வராக்க 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீத ஆதரவும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

    தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் மிக மிக திருப்தியாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் திருப்தி என்று கருத்து கூறியுள்ளனர்.

    25 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். 24 சதவீதம் பேர் பதில் சொல்ல இயலாது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளது என்ற கேள்விக்கு 22 சதவீதம் பேர் அவர் மிக மிக அற்புதமாக செயல்படுவதாக மிகுந்த திருப்தி தெரிவித்து உள்ளனர். 33 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு ஒட்டு மொத்தத்தில் திருப்தி தருவதாக ஆதரவு தெரி வித்துள்ளனர்.

    22 சதவீதம் பேர் மட்டுமே முதல்-அமைச்சர் செயல் பாடில் திருப்தி இல்லை என்று கூறி இருக்கிறார்கள். 23 சதவீதம் பேர் பதில் சொல்ல தெரிய வில்லை என்று கூறியுள்ள னர்.

    ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்கு அமைந்து இருப்பதாகவும் தமிழக மக்களின் கருத்துக்க ளில் இருந்து தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் முதல் கோரிக்கையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகம் ஆகிவிட்டதாக 12 சதவீதம் பேர் கூறியுள்ளனர். போதைப் பொருட்கள் பிரச்சினை அதிகமாக இருப்பதாக 10 சதவீதம் பேரும், வேலையில்லா பிரச்சினை இருப்பதாக 8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

    உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே மிகுந்த திருப்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு மூலம் மக்கள் மத்தியில் தி.மு.க. தொடர்ந்து செல்வாக்கில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு அதிக பேரால் ஆதரவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அது போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வளர்ச்சியும் இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    • 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
    • எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எல்லோரும் தி.மு.க.-வை தான் போட்டியாக நினைக்கிறார்கள். நிச்சயமாக தி.மு.க.வுக்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் என்று கூறினார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • சினிமாவில் இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.

    அப்போது அவர்," சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

    • தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
    • திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்" என்றார்.

    திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வி.சி.க எம்.எல்.ஏசிந்தனைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர், " விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இந்நிலையில் விஜய்யின் உரைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர்," திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை" என்றார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான்" என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் பேசிய அவர், " தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் அவ்வாறு பேசியுள்ளார்.

    ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்" என்றார்.

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம்.
    • தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    "த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.

    சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.

    நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.

    எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-

    * இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...

    * சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?

    * ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?

    * தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...

    * ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.

    * சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார். 

    • எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
    • அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?

    அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.

    அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.

    வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தான் செயின்

    என்ற குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.

    பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று கூறினார்.

    • அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது.
    • சரி பெண்களின் வாழ்க்கைத்தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியதாவது:-

    எத்தனை தடைகள் போட்டாலும் மக்களை பார்க்க நினைத்தால் போயே தீர்வேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன்.

    நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆகணும் கனவு காண்கிறான். அது நடக்கவே நடக்காது என்று சொகின்றீர்கள். அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியே தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போடுகின்றீர்கள்?

    அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சுறாவளியாக மாறும், ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

    என தருமை தமிழக வெற்றிக் கழக தோழர்களே, நான் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமய நல்லிணக்கத்தை பேணும், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். உங்களை வேண்டிவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும் போது மன உளைச்சலும், மனவேதனையும் தருவதாக இருக்கிறது.

    சட்டம் ஒழுங்கு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அதற்கு கரப்ஷன்ஸ், கபடதாரிகள் அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி. இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? நாம் என்ன செய்யப்போறோம்?

    நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை சந்தியுங்கள், அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு தெருவுக்கும், வீட்டுக்கும் சென்று அவர்களின் பிரச்சனை என்னவென்று கேளுங்கள். அதை தீர்க்க என்ன வழி என்று யோசியுங்கள். அப்போது தான் அவர்களுக்கு நம்ம மீது நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான விதையை விதைத்துவிட்டு அதற்கு பின் நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானாக பறக்கும்.

    மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே. உங்க ஆட்சியை பற்றி மட்டும் கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்சப்புள்ளங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் வேறு உங்களை அப்பான்னு கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க.

    தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களோட அரசியலுக்கே ஒரு முடிவு கட்ட போறாங்க. உங்க ஆட்சிக்கு முடிவு கட்டப்போறாங்க. உங்களோட இந்த அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போறாங்க.

    சரி பெண்களின் வாழ்க்கை தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், மின்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம். இதுஎல்லாம் சாம்பிள் தான். இந்த எல்லா போராட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கூட இருக்கும்," என்றார்.

    • ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
    • அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-

    * தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    * அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.

    * காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.

    * மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...

    * ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?

    இவ்வாறு அவர் பேசினார். 

    • சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
    • குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.

    இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    * பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    * அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

    * மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

    * ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறு சீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

    * அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக் கணக்காகப் போராடி வருகின்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.

    * ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத தி.மு.க. அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    * டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும்.

    * சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்தி விட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.

    * இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

    * சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத் தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.

    * தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும்.

    * தலைவருக்கே முழு அதிகாரம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவருக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது.

    * தலைமைக் கழக நிர்வாகிகள், கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

    * திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற பி.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் யு.பி.எம்.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    * பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச்சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

    * மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உரு வாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    * பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.

    * குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள், 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    * தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

    * இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது.

    இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×