என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Talawadi"

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, பாம்புகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தாளவாடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இதனால் வனவிலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த செசன் நகர் அருகே டி.எம்.எஸ். தோட்டம் பகுதி யில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. இந்த மலைப்பாம்பு கோழிகள், ஆட்டை மிகவும் சுலமாக விழுங்கி விடும் அளவிற்கு பெரிதாக இருந்தது.

    சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து உள்ளனர்.

    • தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49) என்பவர் 2 ஏக்கரில் ராகி பயிர் செய்துள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த 4-க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிரை சேதாரம் செய்துள்ளது.

    காலையில் மாதேகவுடா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ராகி பயிர் சேதாரம் ஆனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் ஒரு ஏக்கர் ராகி பயிர் சேதாரம் ஆகியுள்ளது. சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாதவாரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    யானைகள் தொடர்ந்து ராகி தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்து தாளவாடி மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.

    எனவே தாளவாடி வனப்பகுதி செல்லும் கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி, அந்தியூர் அரசு கலை கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்தியூர் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டில்கல்லூரி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து 2022-2023-ம் ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

    இதற்கான வகுப்பறைகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதே போல் தாளவாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இனறு தொடங்கி நடந்து வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×