என் மலர்
நீங்கள் தேடியது "tamimun ansari"
- அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது.
- அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது
திருப்பூர்:
ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை என்று மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறும் போது, திருப்பூரில் அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும்.அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது. ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது சாத்தியமற்றது. இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியிருப்பது மக்களைத் திசை திருப்பக் கூடிய ஒரு செயலாகும். நாம் இந்தியா்கள் என்று உலக நாடுகளுக்கு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதை மாற்ற வேண்டும் என்பது தவறான செயல் என்றாா்.
- தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடும் வெயில் எதிரொலியால் பள்ளிக் கூடங்கள் 2 வாரங்கள் தள்ளி திறக்க வேண்டும் என்று ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் கடும் வெயில் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.
எனவே பள்ளிக்கூட திறப்பு தேதியை இரண்டு வாரங்கள் ஒத்திப் போடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளது.
- மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் 180 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 180 ஆண்டு பழமையான மசூதி இடிக்கப்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உ.பி. மாநிலத்தில் 180 ஆண்டு கால நூரி மசூதியை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 'அரசியல் புல்டவுசர்' தகர்த்துள்ளது. சாலை விரிவாக்கம் எனில், அது மசூதிகளுக்கு மட்டும்தானா? அவர்களது நோக்கம் என்பது சாலை விரிவாக்கமல்ல. அதன் பெயரால் கலவரம் உருவாக்குவதே நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
- திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து.
- திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை மக்கள் தண்டித்துள்ளனர் என்றும் நாதகவை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், " பெரியாருடைய மண்ணில் அவரை சிறுமைப்படுத்துபவர்களை ஒரு எல்லைக்கோட்டில் வைத்து மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.
பெரியார் பிறந்து வளர்ந்த மண்ணில் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருதாக' இதை கருதுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
- 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.
மேட்டுப்பாளையம்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு கோவை செல்லும் வழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டு ஆயுள் சிறைவாசிகளுக்காக உரிமை குரலை முழக்கம் இடமுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து வருகின்றோம்.
இதே கோரிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 8 -ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை பற்றி விவாதித்து முடிவெடுத்து பரிசீலனை பெறுவதற்காக நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்தது. 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.
நாங்கள் பதிவு தபாலில் அனுப்பி வைத்த கோரிக்கை மனு கூட இந்த முகவரியில் அலுவலகம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர், பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசார், துணைச் செயலாளர் ஜாபர் அலி, காஜாமைதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.