என் மலர்
நீங்கள் தேடியது "tariff"
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாகவும், இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
- தேர்தல் முடிந்த உடன் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இறுதிக்கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன் பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ அவற்றை நாம் வசூலிப்போம்.
- மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
வர்த்தகத்தில், நியாயமான நோக்கத்திற்காக நான் பரஸ்பர கட்டணங்களை வசூலிப்பேன் என்று முடிவு செய்தேன்.
அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ, அவற்றை நாங்கள் வசூலிப்போம். அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை.
அவர்கள் எங்களிடம் வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இது மிகவும் எளிமையானது, நாங்கள் அவர்களிடம் சரியான வரி மற்றும் கட்டணங்களை வசூலிப்போம். மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது.
இது பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய விஷயம். இதுவரை யாரும் கண்டிராத அளவில் சீனா அதைச் செய்தது என தெரிவித்துள்ளார்.
சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது. இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.
அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது. இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்” என குறிப்பிட்டார். #USD #ChineseGoods #ImportTariff