என் மலர்
நீங்கள் தேடியது "Tarpaulin"
- கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய்.
- நகர்மன்ற தலைவர் தார்பாய் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பெரியநாயகிபுரம், விசுவகொத்தமங்கலம், வீரன் நகர் பகுதியை சேர்ந்த 376 கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மக்களுக்கு தார்பாய் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் கோமதி செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.
இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.