search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarsalai"

    • தொழிலாளர்கள் மழை தண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
    • வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.

    இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்து கொண்டு இருந்தனர்.

    இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மழைநீரில் தார்சாலை அமைத்தால் எப்படி தாங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×