என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teens"

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
    • அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை திடீர் நகர் பகுதியில் கொலை திட்டத்திற்காக வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர்.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தே–கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களி–டம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொலை திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    யாரை கொலை செய்ய அவர்கள் பதுங்கி இருந்தார்கள், எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    • 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
    • ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.

    இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.

    இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.

    ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.

    இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.

    ×