search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejas Express train"

    • மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
    • சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.

    * கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

    * எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும்.
    • கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். #Maharashtra #TrainAccident #TejasExpress
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் கோவாவில் இருந்து மும்பை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர்.

    இதில், ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் தொழிலாளர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிச்சென்றது. இதில், தூக்கி வீசப்பட்டு தொழிலாளர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
    ×