என் மலர்
நீங்கள் தேடியது "tha pandian"
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.
தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். 86 வயதான அவர் கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தா.பாண்டியனை அவரது உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக் டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜாவும் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை நேரில் சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் நலம் விசாரித்தனர்.
இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #edappadipalanisamy #thapandian
தஞ்சாவூர்:
அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.