search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalawadi-Bargur hills"

    • சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
    • மலைப்பகுதியில் தொடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப் பட்டு வருகிறது.

    இதே போல் இன்று காலை ஈரோடு, கோபி செட்டி பாளையம், பெருந் துறை அந்தியூர். சென்னி மலை உள்பட அனைத்து பகுதிகளிலும் மேக மூட்ட த்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்ட காஜனூர் உள்பட வனப் பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து வனப்பகுதி களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சிலு, சிலுவென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் வனப்பகுதி குளிர்ச்சி யாக காணப்படு கிறது.

    மேலும் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியிலும் இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் மலைப பகுதியில் ெதாடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    இதே போல் இன்று காலை மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, ஆப்பக்கூடல், அத்தாணி உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதி களிலும் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால மாவட்டத்தில் குளிர் அதிகமாக இருந்தது.

    ×