என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Raft"

    • கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.

    இதில்நேற்று 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    விழாவின் இறுதி நாளான இன்று 24ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும, இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பார்வையில் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×