என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruparankundram"

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் காலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், இரவு 7 மணி அளவில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என்று வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி கைப்பார நிகழ்ச்சியும், 20-ந்தேதி பங்குனி உத்திரமும், 22-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது. அந்த தேரை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டது.



    அதன்பிறகு கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை வீசினார். காலை 6.18 மணி அளவில் நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.

    விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை 10.55 மணி அளவில் நிலைக்கு வந்தன. உடனே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் இழுக்க பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேரை அரிச்சந்திர மகாராஜா தனது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த தேரில் ஏராளமான சிற்பங்கள இருந்த போதிலும் ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்தது போன்று அரிய சிற்பம் இருப்பது தான் விசேஷமாக உள்ளது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடையாளமாக அந்த சிற்பம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் தராசு பிடித்திருப்பதால் திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைக்கிறார்கள். இத்தகைய பல நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட பெரிய தேரானது, ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் கிரிவலப் பாதையை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய வழக்கப்படி தேர் இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருங்குடி, பரம்புபட்டி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், தனக்கன்குளம், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கோவில் முதல் ஸ்தானிகர் சாமிநாதன் மற்றும் நாட்டாண்மை கணக்குப்பிள்ளை வைராவி மற்றும் காவல் மிராசுகள் சென்று அங்குள்ள கிராம நாட்டாண்மைகளிடம் திருவிழா அழைப்பிதழ் மற்றும் பணம், வெற்றிலை, பாக்கு வைத்து தேர் இழுக்க வாருங்கள் என்று பாரம்பரிய வழக்கப்படி அழைப்புவிடுத்தனர்.

    இதனையடுத்து கிராம நாட்டாண்மைகள் மூலம் அந்தந்த கிராமங்களில் தேர் இழுக்க வாருங்கள் என்று மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர் இழுக்க வருகை தரும் கிராம மக்களுக்கு தேர் நிலைக்கு வந்ததும் அந்தந்த கிராம நாட்டாண்மை சார்பில் தயிர்சாதம் வழங்கப்படும். மேலும் தேரோட்டம் முடிந்ததும் அன்று மாலை கிராம நாட்டாண்மைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை மரியாதை மற்றும் பரிவட்டம் வழங்கப்படும். இத்தகைய நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.



    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt
    புதுடெல்லி:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது.

    அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt
    திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றகனர்.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள அமிதா நகரைச் சேர்ந்தவர் மணி மாறன். இவரது மனைவி ராஜேசுவரி (வயது 45).

    இவர், சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, சன்னதி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ராஜேசுவரி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஆள் நடமாட்டம் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகை பறிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரங்களில் அமர்ந்து கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.விழாவையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்குமாக சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. நடராஜ பெருமாளுக்கு “களி” படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக “களி” வழங்கப்பட்டது.

    பின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
    கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி, தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ஹேமலதா (வயது 40).

    சம்பவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி கும்பிட்ட பின் ஹேமலதா 16 கால் மண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹேமலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் வேன்-பஸ் மோதியது. இதில் வேனில் வந்த அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    கடலூரில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் வந்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

    இடிபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். வேன் டிரைவர் பால முருகனின் கால் முறிந்தது.

    இதே வேனில் வந்த செல்வம், தங்கதுரை, நடராஜன் ஆகிய 3 அய்யப்ப பக்தர்களும் காயமடைந்தனர். 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் கார்த்திகை தீப திருவிழாவில் வருகிற 23-ந்தேதி மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தெய்வானையுடன் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 23-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.

    இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    ×