என் மலர்
நீங்கள் தேடியது "thiruparankundram"
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது. அந்த தேரை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு இருந்தது.
தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டது.

விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை 10.55 மணி அளவில் நிலைக்கு வந்தன. உடனே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் தராசு பிடித்திருப்பதால் திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைக்கிறார்கள். இத்தகைய பல நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட பெரிய தேரானது, ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் கிரிவலப் பாதையை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் பாரம்பரிய வழக்கப்படி தேர் இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருங்குடி, பரம்புபட்டி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், தனக்கன்குளம், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கோவில் முதல் ஸ்தானிகர் சாமிநாதன் மற்றும் நாட்டாண்மை கணக்குப்பிள்ளை வைராவி மற்றும் காவல் மிராசுகள் சென்று அங்குள்ள கிராம நாட்டாண்மைகளிடம் திருவிழா அழைப்பிதழ் மற்றும் பணம், வெற்றிலை, பாக்கு வைத்து தேர் இழுக்க வாருங்கள் என்று பாரம்பரிய வழக்கப்படி அழைப்புவிடுத்தனர்.
இதனையடுத்து கிராம நாட்டாண்மைகள் மூலம் அந்தந்த கிராமங்களில் தேர் இழுக்க வாருங்கள் என்று மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர் இழுக்க வருகை தரும் கிராம மக்களுக்கு தேர் நிலைக்கு வந்ததும் அந்தந்த கிராம நாட்டாண்மை சார்பில் தயிர்சாதம் வழங்கப்படும். மேலும் தேரோட்டம் முடிந்ததும் அன்று மாலை கிராம நாட்டாண்மைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை மரியாதை மற்றும் பரிவட்டம் வழங்கப்படும். இத்தகைய நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது.
அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt
மதுரை:
மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள அமிதா நகரைச் சேர்ந்தவர் மணி மாறன். இவரது மனைவி ராஜேசுவரி (வயது 45).
இவர், சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, சன்னதி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ராஜேசுவரி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஆள் நடமாட்டம் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகை பறிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி, தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ஹேமலதா (வயது 40).
சம்பவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி கும்பிட்ட பின் ஹேமலதா 16 கால் மண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹேமலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
கடலூரில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர்.
அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் வந்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றனர்.
இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். வேன் டிரைவர் பால முருகனின் கால் முறிந்தது.
இதே வேனில் வந்த செல்வம், தங்கதுரை, நடராஜன் ஆகிய 3 அய்யப்ப பக்தர்களும் காயமடைந்தனர். 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 23-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.
இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram