என் மலர்
நீங்கள் தேடியது "Thoothkudi"
- முத்துக்குமார் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.
இதனை கண்டித்து தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதில் ரமேசை போலீஸ் காவலில் எடுக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரூரல் டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரமேசை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.