என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tidel park"

    • 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
    • ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.

    திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

    2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
    • ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை தரமணி, பட்டாபிராம், கோவையை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியிலும் தமிழக அரசு டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பஸ்நிலையத்துக்கு அருகில் இந்த புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.

    கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.

    இதே போல் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இதன்படி தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

    சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

    • வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர். சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் 2-வது யு டர்ன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேம்பாலத்தின் மையத்தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடது புறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கிச் செல்ல முடியும்.

    இந்நிலையில், டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை தரமணியில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் விழுப்புரம், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தரமணி டைடல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தையும், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் சிப்காட்டில் தொழில் புத்தாக்க மையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு என்ற கணக்கெடுப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும். புதிய டைடல் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். உற்பத்தியில் தெற்காசிய அளவிலேயே தமிழகம் சிறந்த இடத்தை அடைந்துள்ளது.

    2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×