என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati temple"
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
- திருப்பதியில் நேற்று 65, 569 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
கோடைகாலத்தில் பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு சாதாரண பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பரிந்துரை கடிதங்களின் எண்ணிக்கையை குறைத்து சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
தற்போது தினமும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் 4 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் 1,500 பேரும், நன்கொடையாளர்கள், மெய்நிகர் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆந்திராவில் கோடை வெயிலில் தாக்கும் அதிகரித்து காணப்படுவதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதி அடைவார்கள்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
திருப்பதியில் நேற்று 65, 569 பேர் தரிசனம் செய்தனர். 21,780 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- 25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- திருப்பதி கோவிலில் நேற்று 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25 மற்றும் 30-ந் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 30-ந்தேதி உகாதி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மற்றும் 29-ந்தேதிகளில் எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தெலுங்கானா மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரை கடிதங்கள் இந்த மாதம் 23-ந்தேதி பெறப்பட்டு 24-ந் தேதி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது வேலை செய்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இறைவனைக் காணும் வாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருமலையின் புனித மலைகளைச் சுற்றி எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

- ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான், திருப்பதியின் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
- திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன.
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி சென்றால் தங்கள் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று கருதும் மக்கள் அங்கு சென்று வழிபாட்டை செய்கிறார்கள். இந்த திருப்பதி திருமலையில் 7-ஆக அமைந்த சில சிறப்புக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஏழு மலைகள்
திருவேங்கடவன் என்று அழைக்கப்படும் வெங்கடாஜலபதி, சப்தகிரி என்று அழைக்கப்படும் 7 மலைகளின் மீது கோவில் கொண்டிருக்கிறார். அந்த ஏழுமலையின் பெயர்கள்:- கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
ஏழு நாமங்கள்
பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்படுபவராகவும் இருப்பவர், திருமலைவாசன். ஆனாலும் அவருக்கு முக்கியமான ஏழு பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.
ஏழு தீர்த்தங்கள்
திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை:- குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், சுவாமி புஷ்கரணி என்பவை ஆகும்.
ஏழு தலை ஆதிசேஷன்
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான், திருப்பதியின் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இங்கு நடைபெறும் பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் 'பெரியசேஷ வாகனம்' என்ற ஏழு தலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.
ஏழு கலச ராஜகோபுரம்
திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு முக்கிய இடங்கள்
கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.
ஏழு மகிமைகள்
திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை:- ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்திர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.
- பக்தர்கள் தாமாக முன்வந்து நாவிதர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
- கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேவஸ்தான ஊழியர்கள், பணியில் இருந்த நாவிதர்களிடம் ஆடைகளைக் கலைத்து சோதனை செய்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்கள், நாவிதர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆனாலும், பக்தர்கள் தாமாக முன்வந்து நாவிதர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதனை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேவஸ்தான ஊழியர்கள், பணியில் இருந்த நாவிதர்களிடம் ஆடைகளைக் கலைத்து சோதனை செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்த பணம் மற்றும் அடையாள அட்டையையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்து நாவிதர்களும் வளாகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணியை தொடங்கினர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக தலைமுடி காணிக்கை அளிக்க முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
- அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் ஆகிய ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
- திருப்பதியில் நேற்று 85,131 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,188 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பின்னர் அதில் ஏற்பட்ட குறைகளைக் களைய அடுத்து வரும் திருவோண நட்சத்திரத்தின்போது, ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாக மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை புஷ்ப யாகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குரார்பணம் நடைபெற உள்ளது.
புஷ்ப யாகத்தன்று கோவிலில் இரண்டாம் அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் உற்சவர்களுடன் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு வகையான பூக்கள் மற்றும் இலைகளால் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
மாலையில் சஹஸ்ர தீபாலங்கர சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதனால், அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் ஆகிய ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதியில் நேற்று 85,131 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,188 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
- கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது.
கொரோனா தொற்று காலத்தில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்போது குறைந்த அளவாக மாதத்திற்கு ரூ.5 முதல் 6 கோடி வரையே உண்டியலில் வசூலானது.
இந்த நிலையில் தொற்று குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் ரூ.1000 கோடியை தாண்டி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் ரூ.139.35 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.122.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனம் மற்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 72,176 பேர் தரிசனம் செய்தனர். 25,549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- நெல்லூர் மாவட்டத்தில் சுமார் 1,300 ஹெக்டேரில் இயற்கை விவசாய முறையில் நெல் வகைகளை பயிரிட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் 3 வேளை உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஒப்பந்த அடிப்படையில் வாங்கி வருகிறது. மேலும் பக்தர்களும் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆந்திர மாநில அரசுடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆந்திர மாநில அரசு நெல்லூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 2640 டன் நெல் கொள்முதல் செய்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்க உள்ளது.
இதேபோல், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 62 மெட்ரிக் டன் நிலக்கடலையையும் கோவில் அறக்கட்டளை கொள்முதல் செய்கிறது.
இதற்காக நெல்லூர் மாவட்டத்தில் சுமார் 1,300 ஹெக்டேரில் இயற்கை விவசாய முறையில் நெல் வகைகளை பயிரிட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். சுமார் 870 ஏக்கரில் சாகுபடி தொடங்கியுள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு சான்றிதழ் வழங்குவதுடன், அதிகாரிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் விலையும் வழங்கப்படுகிறது.
- திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
- லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்தபோது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 160 கிராம் முதல் 180 கிராம் எடையுள்ள சிறிய வகை லட்டுகள் ரூ.50க்கும், பெரிய வகை லட்டுகள் ரூ.200க்கும், வடை ஒன்று 100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் முந்திரி, திராட்சை, கற்கண்டு உள்ளிட்டவைகளை சேர்த்து தயாரிப்பதால் விற்பனை செய்யப்படும் விலையை விட கூடுதல் செலவு ஆகிறது. இருப்பினும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் லட்டு வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்த போது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. இதனால் லட்டு வாங்க சென்ற பக்தர்களுக்கும் லட்டு கவுண்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்த பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
லட்டு கவுண்டர்களில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின்கள் மைனஸ் ஜீரோவில் உள்ளது. இதனால் எடை குறைவாக காண்பிக்கிறது. அங்குள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின் சரிவர வேலை செய்யவில்லை. ஆனால் நாங்கள் வழங்கப்படும் லட்டு 160 முதல் 180 கிராம் வரை உள்ளது என தெரிவித்தனர்.
இதற்கு தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 61,306 பேர் தரிசனம் செய்தனர். 30,133 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- சுமார் இரண்டு கி.மீ. தூரம் சி.என்.சி. அலுவலகம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வார இறுதி விடுமுறையான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.
நேற்று காலை வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையடுத்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் சி.என்.சி. அலுவலகம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 40 மணி நேரத்திற்கு மேலாக தரிசனம் செய்ய முடியாமல் காத்துக் கொண்டு உள்ளனர். திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.
டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 15 மணி நேரமும், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர். 41,041 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.20 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.
- பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதிக்கு வந்து நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட அளவு முடி சேர்ந்ததும் ஏலம் விடப்பட்டு வருகிறது.
நேற்று 21 டன் எடை கொண்ட தலைமுடி ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தலைமுடியை ரூ.47 கோடிக்கு ஆன்லைனில் ஏலம் எடுத்ததாக திருப்பதி தேவஸ்தான பொது மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.
திருப்பதியில் நேற்று 66,072 பேர் தரிசனம் செய்தனர். 25,239 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர்.
- தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50-க்கு சிறிய வகை லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
லட்டு தயார் செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனை செய்யப்படும் கவுன்டர்களுக்கு லட்டு எடுத்து செல்லும் பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி இருந்தது.
அதன்படி தினமும் ஒரு ஷிப்டுக்கு 30 ஊழியர்கள் வீதம் 3 ஷிப்ட் முறையில் 90 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் லட்டு தயார் செய்யும் இடத்தில் இருந்து கவுன்டர்களுக்கு லட்டுக்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
லட்டுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்டர்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையான அளவு லட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு லட்டு கொண்டு செல்லும் முறை சரிவர தெரியாததால் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 67,486 பேர் தரிசனம் செய்தனர். 36,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.