என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tornadoes"

    • அமெரிக்காவை சூறாவளி தாக்கிய சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியது.

    பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது. சூறாவளியால் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.

    இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

    ஏற்கனவே, அமெரிக்காவில் காட்டுத்தீ பரவல், புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மரகிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, ஆலப்பாக்கம், முறுக்கேறி, பிரம்மதேசம், எண்டியூர், கந்தாடு ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம், மாமரங்கள், பலாமரங்கள், தைல மரங்கள் போன்றவைகள் மின் வயரில் விழுந்து சேதமானது. இதனால் மின்சாரம் அடியோடு நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 30 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். ஊரணி கிராம சாலை முழுவதும் மா மரங்கள் விழுந்து மின்கம்பம் உடைந்து போக்குவரத்து அடியோடு துண்டி க்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழி குப்பம் கிராமத்தில் மர கிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மரக்காணம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர கிளை களை அப்புறப்ப டுத்தினார்கள். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரக்காணம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    ×