என் மலர்
நீங்கள் தேடியது "Trader missing"
- வடக்கு ஆவரங்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்
- சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவரது மனைவி பேச்சியம்மாள் (36). மாரியப்பன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி பேச்சியம்மாள் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கணவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவே அவர் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.