search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders protest"

    • கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது.
    • சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தின் மூலவைகை ஆற்றங்கரை ஓரத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை உள்ளது. இந்த பாதையை பல நூற்றாண்டு காலமாக கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோவிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் சம்பந்தப்பட்ட தனிநபரிடம் கேட்டபோது அந்தப்பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் வருவதாக தெரிவித்துள்ளார்.


    மேலும் முள்வேலியை அகற்ற முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது தொடர்பாக கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளித்தனர். ஆனால் முள்வேலியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் சம்பந்தப்பட்ட தனிநபர் மற்றும் கிராம கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கோவில் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தினர் கடையடைப்பு அறவழி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காலை 8 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • கோவில் சார்ந்த அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை தடுக்க அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் எளிதில் சென்று வருகின்றனர்.
    • கிரவீதிகளில் தடுப்புகள் வைப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர்.

    பழனி:

    பழனி கிரிவீதிகளில் பஞ்சாமிர்த கடைகள், ஓட்டல்கள், அலங்கார பொருள் விற்பனை கடைகள் பல உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை சீசன் காலத்தில் கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். வியாபாரமும் களைகட்டும். அதேபோல் பழனி வடக்கு கிரிவீதியில் உள்ள கோவில் முடிமண்டபம், நூலகம், பொருட்கள் வைப்பறை, தகவல் மையம் ஆகியவை உள்ளன. இங்கும் பக்தர்கள் வந்து பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகங்கள் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு கடைகள் வைத்து ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை தடுக்க அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பக்தர்கள் எளிதில் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் அலுவலகம் முன்பு தடுப்பு கள் வைக்கப்பட்டதற்கு அங்குள்ள சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கிரவீதிகளில் தடுப்புகள் வைப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்படுவதாக கூறினர். இதற்கிடையே நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் அங்கு வந்து கிரிவீதியில் வைக்கப்பட்டு உள்ள தடுப்புகளை பார்வை யிட்டனர். அப்போது சாலையோர வியாபாரிகள் அங்கு வந்து வியாபாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

    ×