என் மலர்
நீங்கள் தேடியது "Transition consultation"
- நாளை முதல் தொடக்கம்
- 26- ந்தேதி வரை நடக்கிறது
வேலூர்:
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, கடந்த 8-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், இந்த கலந்தாய்வு சில நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் கள் பொதுமாறுதல் கலந்தாய்வு, நாளை முதல் 26- ந்தேதி வரை நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கான ஏற் பாடுகள், மாவட்டம்வாரியாக நடந்துவருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) தயாளன் தலைமையில், வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளியில் நடக்கிறது.
இதேபோன்று, அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசி ரியர்களுக்கான கலந்தாய்வு, காட் பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) அங்கு லட்சுமி ஆகியோர் தலை மையில் நடக்கிறது. இதில், பணியிட மாறுதலுக்கு விண்ணப் பித்த ஆசிரியர்கள், தங்களுக்கான கால அட்டவணையின்படி கலந் துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.