என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trespassing"

    • நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.
    • போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பொன்னானி பகுதியை சேர்ந்த மலையாள திரைப்பட நடிகை வின்சி அலோசியஸ். "விக்ருதி" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.

    இவர் "கனகம் காமினி கலகம்", "பீமண்டே வாழி", "ஜன கன மன", "சோல மண்டே தேனீச்சல்", "வெள்ளை ஆல்டோ", "சவுதி வெள்ளக்கா", "பத்மினி", "சூர்யவக்யம்" உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடத்திருக்கிறார். "ரேகா" என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

    இந்தநிலையில் போதைப் பொருள் பன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை வின்சி அலோசியஸ் சமீபத்தில் கூறியிருந்தார். எதற்காக அவ்வாறு கூறினார்? என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் நான் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே எதற்காக அவ்வாறு கூறினேன்? என்று விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தல் ஒரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தி ருந்தேன். அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.

    இதனால் அந்த படத்தில் இருந்து விலக நான் தீர்மானித்தேன். ஆனால் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதாலும் வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தேன்.

    தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்திலும், பொது இடத்திலும் போதைப்போருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
    • அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.

    நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து, எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அணையில் அத்துமீறுகின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். அதே போல் அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்.எச்சரிக்கை பலகை அருகிலேயே அத்துமீறி இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

    பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×