என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » trichy jail
நீங்கள் தேடியது "trichy jail"
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன்படி திருச்சி மத்திய சிறை கைதிகள் 57 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். இதுவரை 6 கட்டமாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 87 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 57 பேரை விடுதலை செய்யுமாறு சிறைத்துறை உயரதிகாரிகளிடமிருந்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி 57 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக் கையை சிறை நிர்வாகம் மேற்கொண்டது.
இதையடுத்து இன்று 57 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதன்மூலம் திருச்சியில் 7 வது கட்டமாக 144 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
×
X