என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTD"

    • குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
    • அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.

    2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.

    • மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • முன்பதிவு செய்த நாளில் ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
    • டிசம்பர் 31-ந்தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.

    ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போனது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் 'சர்வர்' பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளை திருமலையில் கோகார்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 8.30 மணிக்கு உற்சவர் ஏழுமலையான் கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேல தாளம், மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    அங்கு பகல் 11 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 57, 104 பேர் தரிசனம் செய்தனர். 32 351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • 10 மணியளவில் டிக்கெட்டுகள் வெளியீடு.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய முயற்சியால் பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் திருமலைக்கு ஒரு நாள் முன்னதாக வர வேண்டிய அவசியமில்லை.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பக்தர்கள் தெரிவித்த மொத்தம் 33 அழைப்புகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    முன்னதாக அவர் கூறியதாவது:-

    ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பொதுப் பக்தர்களுக்கு விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது வி.ஐ.பி. பக்தர்கள் காலை 8 மணிக்கு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த மாற்றத்தால் பொதுப் பக்தர்களுக்கு 3 மணிநேரம் தரிசன நேரம் கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் திருமலைக்கு ஒரு நாள் முன்னதாக வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் இப்போது திருப்பதியில் தங்கி, பிரேக் தரிசன டிக்கெட்டை பெற்று, காலை நேரடியாக திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    புதிய முயற்சியால் பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமலையில் தங்குவதற்கான விடுதி அறைக்கான பயன்பாடும் குறைத்தது. வி.ஐ.பி. பிரேக் தரிசன மாற்றம் சோதனை முயற்சியாக ஒரு மாதத்துக்கு செயல்படுத்தப்படும்.

    ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் 25 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது மற்றும் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது. எந்தப் பகுதியில் இருந்தும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதேபோல் 10 நாட்களுக்கு தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படும். அந்த டிக்கெட் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் ஒதுக்கப்படும். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி வைகுண்ட துவார தரிசனத்துக்கு வரலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நாளொன்றுக்கு 75 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தை வழங்க ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்துப் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 டிக்கெட் அல்லது தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் திருமலையை அடையலாம். ஆனால் கோவிலுக்குள் சாமி தரிசனம் வழங்கப்பட மாட்டாது.

    வருகிற 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி (தனுர் மாதம்) மாதம் பிறக்கிறது. மார்கழி மாத பிறப்பால் ஏழுமலையான் கோவிலில் வருகிற 17-ந்தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை அதிகாலையில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பவை சேவை நடக்கிறது.

    ஆனந்த நிலையத்தின் மேற்கூரையில் தங்க முலாம் பூசும் பணி தொடங்கப்பட உள்ளது. தங்க முலாம் பூசும் பணியை 6 மாதம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடத்தப்படும்.

    இந்தத் திட்டத்துக்காக பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கத்தை தேவஸ்தானம் பயன்படுத்தி கொள்ளும். இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீவாரி தரிசனம் 1957-58ம் ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி தொடரும்.

    திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி காணிக்கையாளர்களுக்கு நேரில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளை காணிக்கையாளர்கள் தற்போது கடந்த 1-ந்தேதியில் இருந்து மாதவம் தங்கும் விடுதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை நேரில் கவுண்ட்டரில் பெறுகிறார்கள். அதே விடுதியில் அவர்களுக்கு அறைகளும் கிடைக்கும்.

    கீதா ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டிசம்பர் 4-ந்தேதி (அதாவது இன்று) நாத நீராஞ்சனம் மேடையில் பகவத்கீதா அகண்ட பாராயணத்தை ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சி காலை 7 மணியில் இருந்து வேத பண்டிதர்கள் 18 சர்கங்களில் இருந்து 700 ஸ்லோகங்களை இடைவிடாமல் பாராயணம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சி பக்தி சேனலில் ஒளி பரப்பப்படும்.

    நாளை (அதாவது திங்கட்கிழமை) சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் நடக்கிறது. 7-ந்தேதி திருமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. உலக மக்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வ சாந்தி ஹோமம் வருகிற 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்ட 2023-ம் ஆண்டுக்கான டைரிகள் மற்றும் காலண்டர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, புது டெல்லி, ஐதராபாத், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், திருமலை மற்றும் திருப்பதியில் கிடைக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
    • பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை 12-ந்தேதி காலை 10 வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
    • பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை இன்று காலை 10 வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.
    • பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×