search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two-way street"

    • கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீல னைக்கு அனுப்பப்பட்டி ருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள். அது பரிசீலணையில் உள்ளது. மேலும் அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும். எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணை அனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×