என் மலர்
நீங்கள் தேடியது "UPA"
- நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை.
- யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது பி.எம்.கேர் நிதி நிறுவப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பிரதமரின் நிவாரண நிதியின் மீது ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியைப் பெற்றது
பொதுத்துறை நிறுவனங்கள் கூட அறக்கட்டளைக்கு நிதி அளித்தன. அவர்களின் காலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிதியைப் பயன்படுத்துவதை ஆராய எந்தக் குழுவும் இல்லை.
மாறாக, பி.எம்.கேர் நிதியின் நிர்வாகத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட முதல் ஐந்து அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர்.
5 செயலாளர்களைக் கொண்ட குழு அதன் செலவினங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. பி.எம்.கேர் நிதி வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியமான COVID-19 உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.
நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை. யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி அதன் முந்தைய நிதி மேலாண்மை நடைமுறைகளை விளக்குமா என சவால் விடுத்தார்.
- 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தகவல்.
பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்து சென்ற பையில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ரவை இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடாமால் பையை மட்டும் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.
- 2017-ல் ஏர் இந்தியா குத்தகை தொடர்பாக முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
- பிரபுல் பட்டேலுக்கு எதிராக குற்றச்சாட்டில் தவறு செய்ததற்கான ஆதாராங்கள் இல்லை.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தபோது, ஏர்இந்தியா விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் ஏர்இந்தியாவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. தனியார் நபர்கள் அதிக லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு பிரபுல் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதா? அல்லது விசாரணையை தொடர உத்தரவிடுமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியும்போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் பக்கம் சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் வசம் ஆனது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசில் பங்கேற்றுள்ளது.
மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. பா.ஜனதா பக்கம் வந்த உடன் சிபிஐ வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் வாஷிங் மெஷின் என்று அழைத்து வருகின்றன. கரைபடிந்தவர்கள் பா.ஜனதா பக்கம் சென்ற பிறகு தூய்மையடைந்து விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
